Header ad

Breaking News

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு.. மருத்துவமனையில் பலி



ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு.. மருத்துவமனையில் பலி



ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி சுமார் 10 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹர்சிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஷிவானி என்ற 5வயது சிறுமி, நேற்று வீட்டின் அருகே உள்ள மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.

குழந்தையை காணாமல் தேடி, சந்தேகமடைந்த ஷிவானியின் தாய் அந்தப் பகுதிக்கு வந்தபோது மூடாமல் இருந்த ஆழ்துளைக் கிணறு பகுதியில் இருந்து சிறுமி ஷிவானியின் சத்தம் வந்தைகேட்டார்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, ஷிவானியை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை, காவல் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர்,போலீஸார், மாவட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்கும் பணியில் இறங்கினர். முதல்கட்டமாக சிறுமிக்கு டியூப் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது. பின் ஒரு டேப் ரெக்கார்டரில் சிறுமியின் தாய், தந்தை பேசும் குரலைப் பதிவு செய்து குழந்தையின் காதில் கேட்க ச்செய்தனர். முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி, தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது திடீரென சறுக்கி 50 அடி ஆழம் சென்றார். தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழி தோண்டும் பணி ந்டந்து கொண்டே இருந்தது. ஏறக்குறைய இந்த குழி தோண்டும் பணி சுமார் 10 மணிநேரம் வரை நடந்தது.

10 மணிநேரத்துக்குப் பின், 50 அடி ஆழம் சென்ற பேரிடர் மீட்புப் படையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மயக்க நிலையிலிருந்த அந்தச் சிறுமியை உடனடியாக மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சிறுமி ஷிவானி உயிரிழந்தார்.

இதுகுறித்து கர்னல் பகுதி காவல் துறை எஸ்.பி. சுரேந்திர சிங் போரியா கூறியதாவது, " சுமார் 10 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறாகு சிறுமி ஷிவானி மீட்கப்பட்டார்.பின், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மீட்புக்குழு ( தேசிய பேரிடர் மீட்புப் படை) அதிகாலை 3 மணியளவில் வந்தது. அதற்குப் பின் மீட்கும் பணி தீவிரமடைந்தது" எனத் தெரிவித்தார்.

No comments