Header ad

Breaking News

மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றி - உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ரெடி!

மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றி - உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ரெடி!


உலகின் பெரும்பாலான நாடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பு மோசமாக பாதித்து வருகின்றது. தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வராத நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் குணமாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் அச்சுறுத்தும் வகையில் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தனி மனித இடைவெளி உள்ளிட்டவையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு நெருக்கடி கொடுத்து வருகிறது. மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி ரஷ்யா வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. இதுபற்றி ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், டிரான்ஸ்லேஷனல் மெடிசன் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வடிம் டரசோவ் கூறுகையில், செச்சேனோவ் ஃபர்ஸ் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் மீது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்திருக்கிறது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் முதல் குழுவினர் வரும் 15ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.

இரண்டாம் குழுவினர் 20ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரஷ்யாவின் கமாலேய் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமாலஜி மற்றும் மைக்ரோபயாலஜி நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கடந்த ஜூன் 18ஆம் தேதி கண்டுபிடித்தது. இதைக் கொண்டு செச்சேனோவ் பல்கலைக்கழகம் பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

செச்சேனோவ் பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் பாராசிடோலஜி, ட்ரோபிகல் மற்றும் வெக்டார்-போர்ன் டிசீசஸ் பிரிவின் இயக்குநர் அலெக்சாண்டர் லுகாஷேவ் கூறுகையில், மனிதர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருந்தின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பு மருந்துகளைப் போன்று பாதுகாப்பான அம்சங்களை புதிய தடுப்பு மருந்தும் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு மருந்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம் இந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

No comments