Header ad

Breaking News

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : ஐசியு-வில் சிகிச்சை

 எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : ஐசியு-வில் சிகிச்சை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் கவலைக்கிடமானதால், அவருக்கு வெண்டிலேட்டர் சுவாசத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமும், மீண்டும் கவலைக்கிடமாகவும் என மாறி மாறி வருகிறது.

இதனால் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வேண்டியுள்ளனர். இதற்கிடையே எஸ்.பி.பி நலமுடன் இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், எஸ்.பி.பி-ன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments